
நுவரெலியா – மீலிமான பிரதான வீதியின் ரூவான்எலிய பகுதியில் இன்று மண்சரிவு ஏற்பட்டதில் இவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது
மண்சரிவு காரணமாக நுவரெலியா, மீபிலிமான மற்றும் அம்பேவலைக்கான போக்குவரத்து முற்றாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது
பின்னர் பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்மேட்டினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மேலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.