நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு நீர் விநியோகம் தடை!

நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை 3 மில்லியன் ரூபாய் வரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு நீர் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்