நாயிடமிருந்து மான்குட்டி காப்பாற்றிய வனஜீவராசி திணைக்களத்திடம் ஒப்படைத்த மக்கள்

புத்தளம் கல்லடி பகுதியில் மானொன்றை நாய் துரத்திவருவதை அவதானித்த பகுதி மக்கள் மிகவும் பிரயத்தனத்திற்கு மத்தியில் குறித்த மானை நாயிடமிருந்து காப்பாற்றிய நிலையில் உயிருடன் பிடித்துள்ளனர்.

இவ்வாறு மக்களால் காப்பாற்றப்பட்ட  மான்குட்டி புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனையடுத்து குறித்த மான்குட்டியை தப்போவ சரணாலயத்தில் விடுவித்ததாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த மானின் முகத்தில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.

குறித்த மான் 10 மாதக் குட்டியென இதன்போது வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்