நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை

எழுபது மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது வழக்கின் பிரதிவாதியான நாமல் ராஜபக்ஸவும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். கிரிஷ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் ரூபாவையே அவர் முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி, மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகத் தெரிவித்து, கிரிஷ் எனப்படும் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவைப் பெற்று, அதனை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்