தென் ஆப்பிரிக்கா நாட்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கு கேப் மாகாணம் பட்டர்ஒர்த் நகரில் இருந்து ஹிபி என்ற நகருக்கு 80-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.
குவால்வினி என்ற மலைப்பாங்கான கிராமத்தை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் செங்குத்தாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 25 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 62 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.