திருட்டு, ஊழல், மோசடியில் ஈடுபடாத தரப்பினருடன் இணைந்து பயணிக்கத் தயார் – சந்திரிக்கா

திருட்டு ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபடாத  எவருடனும் இணைந்து செயற்படவும்
. நாம்  முன்வைத்துள்ள  நல்ல திட்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்
தரப்பினருடனும்  மாத்திரமே நாம்  இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப தயாராக
உள்ளோம் என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) தெல்துவ கனேவத்த புராண விகாரையில் இடம்பெற்ற
மத வழிபாட்டில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்  கூறுகையில்,

சில தரப்பினர் நேரடியாக ஹெலிகொப்படர் மூலம்  சென்று ஜனாதிபதி பதவியை
பெற்றுக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர். அவர்களிடத்தில் எதிர்கால
நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு தீர்மானங்களும் இல்லை.

மேலும் அவர்கள் இதுவரையில் தெளிவான கொள்கைகளை வெளிப்படுத்தவில்லை.

இருப்பினும்,  நாம் தெளிவான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுத்துள்ளோம்.
இதன் ஊடாக எதிர்காலத்தில் பயணிப்போம்.

அதன் மூலம் நாம் செயற்படுவோம். இருப்பினும் இனிவரும் காலங்களில்
எல்லோருடனும் இணைந்து பயணிக்க முடியாது. அவ்வாறு செயல்பட போவதுமில்லை.

மேலும் எமது கொள்கைகளையும், திட்டங்களையும் புரிந்து அதனை ஏற்று
அதற்கமைவாக செயல்படும் தரப்பினரை மாத்திரமே எங்களுடன் இணைத்து பயணிப்போம்
.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப
கூடிய திருட்டு, ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபடாத தரப்பினருடன் இணைந்து
செயல்பட நாம் தயாராக இருக்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்