தவணை விடுமுறை இல்லை

நாட்டில் நிலவும் நெருக்கடிகளால் இவ்வாண்டு கல்வி செயற்பாடுகள் திட்டமிட்ட படி முழுமையாக இடம்பெறாமையின் காரணமாக ஆகஸ்ட் மற்றும் டிசம்பரில் வழமையாக வழங்கப்படும் தவணை விடுமுறை இம்முறை வழங்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே குறித்த காலப்பகுதியில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கல்வி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் போது மாத்திரம் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்