தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு இ.தொ.கா தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் நேரில் சென்று வாழ்த்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன்
விருது’ வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி
நிதிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்
செயலாளர் ஜீவன் தொண்டமான், போசகர் சிவராஜா, பிரதி தலைவி அனுசியா சிவராஜா,
சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில்
சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது, இவ்விருதானது தங்களுடைய அளப்பரிய சேவையை
எடுத்துக் காட்டுவதாகவும் இவ்விருது கிடைத்தமைக்கு முழு மலையக மக்கள்
சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் இ.தொ.கா தெரிவித்துள்ளது.

இரா.சம்பந்தன் இ.தொ.காவின் வாழ்த்துக்களுக்கு தனது நன்றிகளை
தெரிவித்ததுடன், தனக்கும் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி
தொண்டமானுக்குமிடையிலான நட்புறவையும் நினைவுப்படுத்தினார்.

அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக சமூக மேம்பாட்டிற்காக
தொடர்ந்தும் வெற்றிகரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும்
வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்