ஜனாதிபதி மன்னாருக்கு கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (20) காலை மன்னார்
மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப்
பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து  கலந்துரையாடுவதுமே
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்

மன்னார் நகருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அவர்கள்,
முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக
ஆராய்ந்தார்.

அதன் பின்னர், நடுக்குடா மீனவ கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மீனவ
சமூகத்தவர்களுடன்  சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின்
பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

நடுக்குடா மீனவ கிராம  மக்கள்  எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில்
ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு, அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து
தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
அவர்கள்  சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்