
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள்
கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் இன்று (26) மாலை 04 மணிக்கு ஜனாதிபதி
செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த சர்வகட்சிக்
கூட்டத்தில் பங்கேற்க சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்,
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தி தலைவர்
அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கும் பாராளுமன்றத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர், 2022 டிசம்பர் 13 ஆம்
திகதி நடத்தப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட
நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக
கலந்துரையாடப்பட்டு, கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடு இந்த கூட்டத்தில்
எட்டப்படவுள்ளது.