ஜனவரி முதல் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கத் திட்டம்

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் மதிய உணவு வழங்கப்படுமென்றும் ஜனவரிமாதம் முதல் இந்த மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென்றும்கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்தஇவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.பாடசாலை மாணவர்களுக்கு வழமைபோன்று தேவையான அளவு உணவுக் கிடைப்பதில்லைஎன்பதை இதற்கு முன்னர்,அமைச்சர் பாராளுமன்றில் ஏற்றுக்கொண்டிருந்தார்.இதற்கமையவே, மதிய உணவுத்திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல்ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்ததெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்