சீனாவினால் வழங்கப்படும் பாடசாலை சீருடையின் முதல் தொகுதி அடுத்த மாதம்இலங்கைக்கு கிடைக்கும் – கல்வி அமைச்சர்

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் பாடசாலை சீருடையின் முதல் தொகுதியைஅடுத்த மாதம் இலங்கை பெற்றுக்கொள்ளும் என கல்வி அமைச்சர் சுசில்பிரேமஜயந்த தெரிவித்தார்.கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான சீருடைகளில்70 வீதமான சீருடைகள் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.இதற்கு தேவையான விபரக்குறிப்புகள் ஏற்கனவே சீனாவுக்குஅனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன்படி, தயாரிக்கப்பட்ட சீருடைகளின் முதல்பகுதி அடுத்த மாதம் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்