சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார் டொனால்ட் லூ

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய
பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ
இன்று சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி
கொள்வதற்கு எவ்வாறு இணைந்து பணியாற்றலாம் என்பது குறித்து இந்த
சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு சேவை செய்வதற்கும் அவர்களுக்கு ஆதரவாக
குரல் கொடுப்பதற்கும் வலுவான சிவில் சமூகம் முக்கியமானது என இலங்கைக்கான
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்