
நடிகை சித்ரா சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒரு பிரபலம். இவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமைகளை வெளிக்காட்டி மேலே வந்தவர்.
இவரது பயணத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்துள்ளது, ஆனால் அதையெல்லாம் தாண்டி நாம் பெரிய அளவில் வர வேண்டும் என்ற ஒரே நோக்கில் பயணம் செய்திருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சை கவர்ந்த இவர் திடீரென சில வருடத்திற்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் மக்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
அவரது மரணத்திற்கு கணவர் ஹேமந்த் தான் காரணம் என அவரது பெற்றோர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் திடீரென ஹேமந்த் தன்னை சிலர் மிரட்டுகிறார்கள், எனக்கு பாதுகாப்பு கொடுத்தால் நான் சித்ரா மரணத்திற்கான உண்மைகளை கூறுவேன் என கூறி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன், ஹேமந்த் சூளைமேட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தான் தங்கள் திருமணம் நடைபெற்றதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அப்படி ஒரு ஹோட்டல் இல்லை. அவரது இறப்பு சம்பந்தப்பட்ட பல தகவல்கள் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. மேலும் அவர் மரணமடைந்த அன்று கைரேகை நிபுணர்கள் விசாரிக்கவில்லை. அந்த இடத்தில் இருந்து எந்த கைரேகையை ஆதாரங்களும் கைப்பற்றப் படவில்லை.