சர்வதேசத்தின் முன் நாட்டின் ஊழல்களை தற்போதைய ஆட்சியாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் JVP

நாட்டின் ஊழல்களை தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேச சமூகத்தின் முன் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடு தற்போது பொருளாதாரக் கொலைகாரர்களால் கட்டியெழுப்பப்பட்ட அரசாக மாறியுள்ளதாகவும் இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்