
சர்வக்கட்சி தலைவர் கூட்டம், இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் சிறந்த வழிமுறை என சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர்எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.பொருளாதார நெருக்கடி மற்றும் பசுமை நிலைபேறான திட்டங்கள் தொடர்பாகஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள அவர், ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை நெருக்கடிநிலையில் இருந்து மீட்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுப்படதயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.மேலும் நாட்டில் பெரும்பாலானோருக்கு உணவு பற்றாக்குறை காணப்படுவதாகவும்இதற்காகவும் சர்வதேச சமூகத்துடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்தார்.