
தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் சார்பில் இந்திய வலுதூக்கும் கூட்டமைப்புடன் இணைந்து கோயம்புத்தூரில் ஆசிய வலுதூக்கும் போட்டியை நடத்துகிறது.
ஆசியாவின் 22 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டிக்கான இலச்சினையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். முதலமைச்சர் வெளியிட வலுதூக்கும் சங்க நிர்வாகிகள் இலச்சினையை பெற்றுக் கொண்டனர்.