கொழும்பில் குதிரைப் பந்தய திடலில் மாணவி கொலை :சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது

கொழும்பில் குதிரைப் பந்தயத் திடலில் பல்கலைக்கழக மாணவியொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கறுவாத்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட மாணவி 24 வயதான விஞ்ஞான பீடத்தில் 3 ஆம் ஆண்டில் பயின்றவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்