
கொழும்பு மாவட்டத்தில் முக்கியமான இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி பாராளுமன்ற கட்டடத் தொகுதி,
அதனை அண்மித்த பகுதிகள்
உயர்நீதிமன்றம், அதனை அண்மித்த பகுதிகள்
ஜனாதிபதி செயலகம்
ஜனாதிபதி மாளிகை
கடற்படை தலைமையகம்
பொலிஸ் தலைமையகம்
பாதுகாப்பு அமைச்சு,
இராணுவ தலைமையகம்,
பிரதமர் அலுவலகம்
அலரிமாளிகை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், பாதுகாப்பு செயலாளர் மற்றும்
முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் இருக்கும் பகுதிகள் போன்றன அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளளது.