கொரோனா வைரஸ்- சீனாவில் உயிரிழப்பு 2943 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்துள்ளது.


சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 60 நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளது. 


இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 31 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. மொத்தம் 80 ஆயிரத்து 151 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள 31 மாகாணங்களிலும் 47 ஆயிரத்து 204 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 3000ஐ தாண்டி உள்ளது. சீனாவுக்கு வெளியே அதிகபட்சமாக ஈரானில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவில் 28 பேர் பலியாகி உள்ளனர். 

முகநூலில் நாம்