கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளை சந்தித்து பேசுகின்றார் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர்
சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேசவுள்ளார்.

இன்று(வெள்ளிக்கிழமை) முற்பகல் 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய
இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அவர் சந்தித்துப்
பேசுவார்.

இந்தச் சந்திப்புக்கு விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியினரையும் அவர் சந்தித்து பேசவுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்