
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன்
விலக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர்
இ.கதிர் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்
போதோ இ.கதிர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பு போட்டியிட்டு மிகுந்த பின்னடைவை சந்தித்து இருந்தது. இந்த
நிலையில் தற்போது தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து
வெளியேறி தனித்துவமாக தேர்தலில் போட்டியிட்டுவதற்கு தயாராகி வருகிறது.
உண்மையாக தலைவர் அவர்களுடைய சிந்தனைக்கும் தலைவர் அவர்களுடைய
நம்பிக்கைக்கும் மிக மோசமான ஒரு குரோதத்தனமான வேலையை செய்து இலங்கை
தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி
இருக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தினுடைய ஒரு நோக்கமாக இருக்கின்றது இந்த கூட்டமைப்பையும்
அழித்து மிதவாத அரசியல்வாதிகளையும் தங்கள் வசப்படுத்தி தமிழ்த் தேசியத்தை
சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு உண்மையாக தமிழரசுக் கட்சி துணைபோகி
நிற்கின்றது.
இந்த நிலையில் இன்று தமிழரசு கட்சி மக்களுக்கு செய்திருக்கின்ற மிக
மோசமான துரோகத்தனமான செயற்பாட்டை மக்கள் மிகத் தெளிவாக புரிந்து கொண்டு
வருகின்ற தேர்தல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என்பதை நான் இந்த
இடத்தில் வலியுறுத்தி கூறுகின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக கருத்துக்களை கூறுவதற்கும்
மக்களுக்கு நாங்கள் பணியாற்றுவதற்கும் முழுமையான உரிமை உரித்து
உடையவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள்.
அந்த வகையிலேயே இந்த கருத்தை மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்”என
தெரிவித்துள்ளர்.