
கிளிநொச்சி ஏ-9 வீதி அருகில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த
31 1/2 பரல் டீசல், 1 பரல் பெற்றோல், 25 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன
பொலீஸாரினால் இன்று (03) காலை கைப்பற்றப்பட்டுள்ளன
கிளிநொச்சி பொலீஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய
குறித்த வீட்டினை சுற்றிவளைத்த பொலீஸார் இவற்றினை கைப்பற்றியுள்ளனர்.
நேற்றைய தினமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கைப்பற்றப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்