
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் தனி நபர் ஒருவர் இடியன் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்தாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று (17)இரவு வேளை குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது சந்தேக நபரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி ஒன்று பளை பொலிசாரால் மீட்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் சந்தேக நபர் பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று (18)கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்தப்படவுள்ளார் என பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.