ஓமானில் ஏலத்தில் விற்கப்படும் இலங்கை பெண்கள் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணை

வீட்டுப் பணிப் பெண்களாகப் பணி புரிய ஓமானுக்குச் செல்லும் இலங்கைப்
பெண்களை ஏலம் விடப்பட்டு, விற்கப்படும் ஆட்கடத்தல் கும்பல் குறித்து
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவிப் பொலிஸ்
அத்தியட்சகர்கள் இருவர் தலைமையிலான குழுவினர் ஓமானுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் இளம் பெண்களையும்
பெண்களையும் வீட்டுப் பணிப் பெண்களாக அனுப்புவதாக அவர்களிடம்
உறுதியளித்து ஓமானுக்கு அனுப்புகின்றன, மேலும் அவர்களில் பெரும்பாலானோர்
மத்திய கிழக்கு நாட்டுகளுக்குள்  நுழைய சுற்றுலா விசாவே
பயன்படுத்துகின்றனர்.

அவ்வாறு ஓமானை சென்றடைந்ததும் அவர்களின் வயது மற்றும் தோற்றம்
ஆகியவற்றுக்கு  ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டு, ஏலம் விடப்பட்டு  பாலியல்
செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக விற்கப்படுவதை புலனாய்வாளர்கள்
கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்