எரிபொருள் தீர்ந்து விட்டதால் பாதியில் நின்ற புகையிரதம்

பயணிகள் புகையிரதம் ஒன்று எரிபொருள் தீர்ந்து விட்டதன் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (23) மாலை 4.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற புகையிரதமே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த புகையிரதம் பேரலந்தையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்