
ஜனாதிபதியின் இல்லத்தின் கதவுகளை மக்கள் தகர்த்தெறிந்து மாளிகைக்குள் நுழைந்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் தடைகளைத் தாண்டி பொதுமக்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
இந்தநிலையில் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டமாக பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தமது உச்சக்கட்ட எதிர்ப்பினை வெளிப்படுத்தும் அளவிற்கு எதிர்ப்பினை சம்பாதித்த, வரலாற்றில் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச திகழ்கின்றார்.