உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறுமா ? 10 ஆம் திகதி தீர்ப்பு

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கோரியும், நடத்தக் கூடாது என
கோரியும் உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 10 ஆம் திகதியன்று உயர்
நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலுக்கு தபால் மூலம் எதிர்வரும் 22, 23
மற்றும் 24ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதியன்று உள்ளூராட் தேர்தல்
நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்