உலக நீர் வளமும்,உள்ளுர் நீர்பயன்பாடும் – பூநகரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

மு.தமிழ்ச்செல்வன்

உலக நீர் வளமும்,உள்ளுர் நீர்பயன்பாடும்  – பூநகரி  மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு
உலக நீர் வளமும், உள்ளுர் நீர் பயன்பாடும், நீர் முகாமைத்துவமும் தொடர்பாக மாணவர்களுகான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று நேற்று (10) பூநகரி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தின் நிதி அனுசரணையில் இச் செயலமர்வினை நேற்று காலை ஒன்பது மணி தொடக்கம் 12 வரை பூநகரி வடக்கில் உள்ள 7 பாடசாலைகளை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நடாத்தியிருந்தார்கள்.


உலகில் உள்ள நீர் வளம்,  நீர் பயன்பாடு, குடிப்பதற்கு  பொருத்தமற்ற நீரினால் ஏற்படும் நோய்த்தாக்கங்கள். நிலத்தடி நீர் அருகிச் செல்லுதல், மற்றும் மாசுப்படுதல், நீர் வீண் விரயம் செய்யாது பாதுகாத்தல், நீருக்காக ஏற்பட்டுள்ள போட்டிகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல் வேறு விடயங்கள் தொடர்பில்  மாணவர்களுக்கு  விளக்கமளிக்கப்பட்டது.


தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொறியியலாளர் எஸ்.சாரங்கன், மற்றும் உத்தியோகத்தர்களான அன்றூபிரவீன்,மு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் இச் செயலமர்வினை நடாத்தியிருந்தனர். செயலமர்வின் இறுதியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்தோடு,  மாணவர்களின் அவதானிப்பை ஊக்குவிக்கும் வகையில் 45 நிமிடங்கள் கொண்ட பரீட்சை ஒன்றும் நடாத்தப்பட்டு பரிசல்கள் வழங்குவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


  பூநகரி கோட்டக் கல்வி அதிகாரி கணேஸ்வரநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  கிளிநொச்சி றோட்டறிக் கழகத்தைச சேர்ந்த கஜேந்திரகுமார், திருமதி வனிதா, திருமதி ரதிதேவி, பூநகரி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்