உலக உணவு திட்ட அறிக்கையில் இலங்கையில் 2023 பெப்ரவரி மாதத்திற்கான உணவு பாதுகாப்பு நிலை  

இலங்கையின் பொருளாதார நிலையும்  உணவு பாதுகாப்பும்  தொடர்ந்தும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

2023 பெப்ரவரி மாதத்திற்கான உணவு பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வில் 32 வீதமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வது தெரியவந்துள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் சந்தைகளில் விலைகள் தளம்பல் நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ள  உலக உணவு திட்டம் எனினும் சந்தைகள் தொடர்ந்தும் இயங்குகின்றன பல தரப்பட்ட பொருட்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்