இலங்கை – இந்தியத் தலைவர்கள் டோக்கியோவில் சந்தித்து பொருளாதார நெருக்கடி குறித்து பேச்சு

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்  இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையில் யப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய இலங்கை தலைவர்கள் மத்தியிலான சந்திப்பு பத்து நிமிடங்கள் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமைக்காக ரணில்விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்த  பேச்சுவார்த்தைகளை இரு தலைவர்களும் மேற்கொண்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நரேந்திரமோடியும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் கடன் மறுசீரமைப்பு குறித்தும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  இந்தியாவிடமிருந்து அதிக முதலீடுகளை கோரினார். இதற்கு சாதகமாக பதிலளித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி; தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு  உதவுவதற்காக இந்தியா முதலீடுகளை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்