இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற இடமளிக்க மாட்டேன் – ரணில்

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை என
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது ஜனன
தினத்தை முன்னிட்டு நேற்று (புதன்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இலங்கையர்களாக நாம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர்
தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் இந்த வருட வரவு செலவுத்
திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வங்கி முறையை
வலுப்படுத்தும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம்
முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்