
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, இலங்கையைச் சேர்ந்த மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை அடுத்துள்ள கம்பிபாடு கடற்கரையை சென்றடைந்தனர்.
இவர்களை மீட்ட ராமேஸ்வரம் கரையோரப் பொலிஸார், மண்டபம் கரையோரப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைய, பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக செல்லும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.