இலங்கையின் பொருளாதார நெருக்கடி – செஞ்சிலுவை ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர் கவலை

இலங்கையின் நலிவடைந்த நிலையில் உள்ள மக்கள் காரணமாக
பெருமளவு கடன்வாங்குதல்  குறைந்தளவு உணவை உண்ணுதல் நாளாந்த உணவை
குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவை
செம்பிறை சமூகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர்
அலெக்ஸாண்டர் மத்யூ தெரிவித்துள்ளார்

சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சமூகத்தின் இலங்கை குறித்த அறிக்கைகள்
ஏற்கனவே வறுமைக்கோட்டின் கீழ் உள்ள இலங்கையின் நலிவடைந்த மக்கள் எவ்வாறு
விரக்தி நிலையை நோக்கி தள்ளப்படுகின்றனர் என்பதை நேரடியாக தெரிவிக்கும்
விதத்தில் காணப்படுவதாக  சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சமூகத்தின் ஆசிய
பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர் அலெக்ஸாண்டர் மத்யூ
தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கம் மற்றும் இராஜதந்திர
சமூகத்தினரை சந்திப்பதற்காக மேற்கொண்ட விஜயம் குறித்து கருத்து
தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்