
இலங்கையின் நல்லிணக்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான முயற்சிகளில் தொடர்ச்சியாக
ஈடுபட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க
அமைச்சர் டகேசுன்சுகே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளிற்கு 100 மில்லியன் ஜப்பான் யென்னை
வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடனான சந்திப்பின்போது ஜப்பானிய அமைச்சர்
இதனை தெரிவித்;துள்ளார்.
அரசாங்கம் வடக்கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களில்
95வீதமானவர்களை அவர்களிற்குரிய நிலங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக
அயராது முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.