இரா.சம்பந்தனின் வீட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இரகசிய பேச்சு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற்குழுக் கூட்டம் தற்பொழுது திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெறுகிறது.

இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், நிர்வாகச் செயலாளர் குணநாயகம், யாழ் மாவட்ட பாராளுமன்ற உருப்பினர்களான

எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஶ்ரீதரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராஜா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் கட்சி சார்ந்த பிரச்சனை என்பனவும் ஆராயப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்