இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

கேகாலை – களுகல மாவத்தை பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் ஊழியரான, கேகாலை – ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்