இந்திய புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை அலங்கரிக்க காஷ்மீர் கம்பளங்கள் அலங்கரிப்பு

புதுடில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்றத்தின் மாடியில் பாரம்பரிய காஷ்மீர் கம்பளங்கள் அலங்கரிக்கப்பட உள்ளது. 

காஷ்மீர் தரைவிரிப்புகள் மற்றும் சால்வைகள் அவற்றின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் வேலைப்பாடுகளுக்காக மிகவும் கவரக்கூடியவையாகும். 

காலப்போக்கில், உலகத்தரம் வாய்ந்த தலைசிறந்த படைப்புகள் குறிப்பாக முகலாய-ஆப்கான் மற்றும் சீக்கிய-டோக்ரா காலத்து படைப்புகளாகவும் இவை காணப்படுகின்றன.

இந்த தலைசிறந்த படைப்புகளில் சில உலகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 8/11 அடி அளவுள்ள 12 பாரம்பரிய காஷ்மீரி பட்டுத் தரைவிரிப்புகளைத் தயாரிக்க டெல்லியைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து கோரப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட ஐம்பது கைவினைஞர்கள் இந்த திட்டத்தை முடிக்க இரவு பகலாக உழைத்து வருகின்றனர். 

இந்த கம்பளம் இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வந்து காஷ்மீரின் பாரம்பரிய கைவினைப் பொருட்களைப் பார்க்கும் இடத்தில் இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக  உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்