இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இ.தொ.கா.விற்கும் இடையில்கலந்துரையாடல்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து, TANTEA தோட்டங்களில்குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைதொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்பாக்லேவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவர்களின்வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் கூட்டுப் பொறுப்பு இந்தியா மற்றும் இலங்கைஆகிய இரு அரசாங்கங்களுக்கும் உண்டு என இதன்போது தெரிவிக்கப்பட்டது.மேலும் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டிய 10,000 வீடுகள் குறித்தும்பெருந்தோட்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக தொண்டமான்தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்திய ஆசிரியர்களை நியமித்து, புதியபாடநெறிகள் ஆரம்பிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இ.தொ.காவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனஇதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் அரசியல்பிரிவுக்கான முதன்மைச் செயலாளர் திருமதி பானு ஆகியோர்உறுதியளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்