இந்தியாவின்  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணு மின் நிலையம்   முழு ஆற்றலுடன் உற்பத்தி

இந்­தி­யாவின் குஜராத் மாநி­லத்தின் காக்­ராபர் அணு மின் நிலை­யம் முற்­றிலும் உள்­நாட்டில் மேம்­ப­டுத்­தப்­பட்ட 3 ஆவது அலகு மின் உலை முழு உற்­பத்தித் திறனை எட்­டி­யமை தொடர்பில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பாராட்டு தெரி­வித்­துள்ளார்.

 ‘எக்ஸ்’ வலை­தள (முன்னர் டுவிட்டர்) பக்­கத்தில் பிர­தமர் மோடி வெளி­யிட்ட பதிவில், ‘இந்­தியா மற்­று­மொரு மைல்­கல்லை எட்­டி­யுள்­ளது. முதல் உள்­நாட்டு அணு மின் உலை­யான 700 மெகாவாட் மின் உற்­பத்தித் திறன் கொண்ட காக்­ராபர் அணு மின் நிலை­யத்தின் 3ஆவது அலகு முழு உற்­பத்தித் திறனை எட்­டி­யுள்­ளது. அதற்­காக விஞ்­ஞா­னிகள் மற்றும் பொறி­யி­ய­லா­ளர்­க­ளுக்கு பாராட்­டுக்கள் எனக் குறிப்­பிட்­டுள்ளார். 

காக்­ரா­பரில் அணு மின்­நி­லை­யத்தில் உள்ள 3 ஆம் பிரிவு அணு உலை, கடந்த ஜூன் 30-ஆம் திகதி வணிக ரீதி­யி­லான மின் உற்­பத்­தியை ஆரம்­பித்­தது. தற்­போது 90 சத­வீத உற்­பத்தித் திற­னுடன் செயல்­படத் தொடங்­கி­யுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 இந்­தி­யாவில் தாராப்பூர் (மஹா­ராஷ்டிரா), ராவட்­பட்டா (ராஜஸ்தான்), நரோரா (உத்­தரப் பிர­தேசம்), கக்­ரபார் (குஜராத்), கல்­பாக்கம் (தமிழ் நாடு), கைகா (கர்­நா­டகா) முத­லான இடங்­களில் அணுமின் நிலை­யங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த  அணு மின் நிலை­யங்­களில் இருந்து மொத்தமாக 7,480 மெகாவாட் மின்­சாரம் உற்­பத்தி செய்யப்படுகிறது. இதை 2031 ஆம் ஆண்டில் 22,480 மெகாவாட் ஆக அதிகரிப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்