
பாராளுமன்றம் நாளை (27) காலை 9.30 க்கு கூடவுள்ளது.
இதன்போது செப்டேம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான கால எல்லைக்கான இடைக்கால கணக்கு அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சமர்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளையும், நாளை மறுதினமும் (28) இடம்பெறவுள்ளன.
மேற்குறித்த இரண்டு தினங்களிலும் காலை 9.30 முதல் மாலை 6.30 வரை இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை 9 ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் செயலமர்வின் இறுதி நாள் இன்றாகும்.
நேற்று (25) காலை 9 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த செயலமர்வு ஆரம்பமானது.
இந்த செயலமர்வில் பங்கேற்குமாறு சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தாக பாராளுமன்ற தொலைத்தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெறுகின்றது.
எதிர்வரும் ஒவ்வொரு புதன்கிழமை நாட்களிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இவ்வாறு அமைச்சரவை கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.