இங்கிலாந்தில் கடந்த இரு மாதங்களில் கொவிட்-19 தொற்று பரவல் குறைந்துள்ளது!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு இடையில் தொற்றுநோய்களின் பரவல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கநிலை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தொற்றுநோய்கள் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது. ஆனால் 200 பேரில் ஒருவருக்கு இன்னும் வைரஸ் உள்ளது.

தடுப்பூசி திட்டத்திலிருந்து சிறந்ததைப் பெற, குறைந்த வைரஸ் அளவு தேவை என்று இம்பீரியல் கல்லூரியின் ஆய்வு கூறுகிறது.

பெப்ரவரி 4ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை 165,000 பேரின் சோதனைகளின் அடிப்படையில், இங்கிலாந்தில் 0.5 சதவீத மக்களுக்கு வைரஸ் இருப்பதாக ஆய்வு முடிவுகள் மதிப்பிடுகின்றன. இது ஜனவரி மாதத்தில் 1.57 சதவீதமாக இருந்தது.

அனைத்து வயதினரிடமும் மற்றும் பெரும்பாலான பிராந்தியங்களில் ஜனவரி தொடக்கத்தில் இருந்து வீட்டு தொற்றுநோய்களில் கணிசமான வீழ்ச்சியை காட்டுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்