ஆண் ஒருவர் வேலி கடந்து சென்றுள்ளார் அவரை தாக்கிக் கொன்ற சிங்கம்

வேலி கடந்து சிங்கக் கூண்­டுக்குள் சென்ற நபர் ஒரு­வரை சிங்­க­மொன்று கடு­மை­யான தாக்கிக் கொன்ற சம்­பவம் கானா­வி­லுள்ள மிருகக் காட்­சி­சா­லையில் இடம்­பெற்­றுள்­ளது.

ஆபி­ரிக்க நாடான கானாவின் அக்ரா மிருகக் காட்­சி­சா­லையில் இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தில் 30 வயதைக் கடந்த ஆண் ஒருவர்  உயி­ரி­ழந்­துள்ளார் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி நபரின் சட­லத்தை சிங்­கத்தின் கூண்டுப் பகு­தி­யி­லி­ருந்து ஊழி­யர்கள் கண்­டு­பி­டித்­தனர் என அதிஹ­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். 

உட்­புற வேலிக்கு உட்­பட்ட பகு­தி­யில சிங்­க­மொன்­றினால் தாக்­கப்­பட்­டதால் இந்­நபர் உயி­ரி­ழந்தார் என கானாவின் வனத்­துறை ஆணைக்­குழு அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

சிங்­கக்­குட்­டி­யொன்றை எடுத்துச் செல்­வ­தற்­காக இந்­நபர் சிங்கக் கூண்­டுப்­ப­கு­திகள் வேலி தாண்டி சென்­றுள்ளார் என உள்ளூர் ஊட­க­மொன்று தெரி­வித்­துள்­ளது. எனினும் இந்­ந­பரின் நோக்கம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். 

இச்­சம்­ப­வத்தின் பின், மேற்­படி கூண்டில் ஒரு ஆண் சிங்கம், ஒரு பெண் சிங்கம் மற்றும் இரு சிங்­கக்­குட்­டிகள் பாது­காப்­பாக காணப்­பட்ட என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்