
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் மேனின்டீ நகரிலுள்ள டார்லிங் நதியில் இவ்வாறு மீன்கள் இறந்து நிலையில் மிதப்பது குறித்து முதல் தடவையாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.கடுமையான வெப்பஅலைகளே இதற்குக் காரணம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நகரில் இதற்கு முன்னரும் அதிக எண்ணிக்கையான மீன்கள் இறந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.எனினும், இம்முறையே மிக அதிக எண்ணிக்கையான மீன்கள் இறந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மில்லியன் கணக்கான மீன்கள் இறந்துள்ளன என நியூ சௌத் வேல்ஸ் மாநில அரசாங்கம் தெரிவித்தள்ளது.சுமார் 30 கிலோமீற்றர் தூரத்துக்கு இறந்த மீன்கள் காணப்படுவதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.