அரபிக்கடலில் உருவாகும் புதிய பாரிய தாழமுக்கம்!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.30) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதுபோல, மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பா் 1 ஆம் திகதி ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.30) புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனைத் தொடா்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். மேலும், இது தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளும். இது, வடக்கு ஆந்திரம்-ஒடிஸா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (நவ.30), புதன்கிழமை (டிச.1) செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி டிசம்பா் 1 ஆம் திகதி உருவாகவுள்ளது. இந்த இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறுகையில், ‘குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக் கடலை அடைந்த பிறகு, மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலைகொள்ள வாய்ப்பு உள்ளது.

இது மகாராஷ்டிரம், குஜராத் இடையே நகர வாய்ப்பு உள்ளது. இதுதவிர, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை உருவாகவுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறி, ஆந்திரம்-ஒடிஸா நோக்கி நகரவாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்றாா் அவா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்