அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலன்புரிக் கொடுப்பனவுகள் குறித்து அச்சப்பட தேவையில்லை

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலன்புரிக் கொடுப்பனவுகள் தொடர்பில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்த தேவையில்லை எனவும், அந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச வருமானம் மற்றும் செலவுகளை நிர்வகிப்பதில் இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்படும் என அவர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சில திட்டங்களுக்கான கட்டணங்களைத் தீர்ப்பதற்கான முறையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்