அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்படவுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது, பெண்கள் சேலையும், கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்கு பொருத்தமான உடையையும் அணிய வேண்டும் என சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு வெள்ளை நிற மேற்சட்டையும் கறுப்பு நிற காற்சட்டையையும் அலுவலக ஆடையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.