
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 110 ஆவது மைல் கல் பகுதிக்கு அருகில் வைத்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கொட்டாவை – மாக்கம்புற பகுதியிலிருந்து, ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த ஹம்பாந்தோட்டை பேருந்துசாலைக்கு சொந்தமான பேருந்தில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பேருந்தில் பயணித்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.